Monday, September 13, 2010

ஏர் பேக்கின் அவசியம்....!!!! - சிறுகதை


நெடுஞ்சாலையில் கார் ஒன்று விரைந்து கொண்டிருந்தது. தம்பதியர் பயணித்துக் கொண்டிருந்தார்கள். மனைவிதான் காரை ஓட்டிக் கொண்டிருந்தாள்.
அறுபது கிலோ மீட்டர் வேகத்தில் கார் சென்று கொண்டிருந்தது.
திடீரென்று திரும்பி அமர்ந்த கணவன், அவளைப் பார்த்துப் பேசத் துவங்கினான்.
"திருமணமாகி இருபது ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம். இருந்தாலும் எனக்கு விவாகரத்து வேண்டும்."
மனைவி பதில் ஒன்றும் சொல்லவில்லை! சாலையைப் பார்த்து வண்டியைக் கவனமாக ஓட்டிக் கொண்டிருந்தாள்.
காரின் வேகத்தை அதிகப் படுத்தினாள். இப்போது மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டி செல்ல ஆரம்பித்தது.
கணவன் மேலும் சொல்ல ஆரம்பித்தான்," இது சம்பந்தமாக உன்னுடைய வாதங்கள் எதையும் நான் கேட்க விரும்பவில்லை! ஏனென்றால் உன்னுடைய மிகச் சிறந்த தோழியுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. அவள் உன்னைவிட புத்திசாலி,
அதோடு நேசம் மிக்கவள். காதலில் ஈடுபடத் தெரிந்தவள்.குறிப்பாகச் சொன்னால் உன்னைவிட எல்லா வகையிலும் அவள் சிறந்தவள்"
இதற்கும் பதில் ஒன்றும் சொல்லாமல் அவள் இருந்தாள். ஆனால் காரின் ஸ்டீரிங் வீலைக் கெட்டியகப் பிடித்துக் கொண்டு வண்டியின் வேகத்தை அதிகப் படுத்தினாள் இப்போது மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டி செல்ல ஆரம்பித்தது.
அவளுடைய மனநிலையைப் பற்றிக் கவலைப் படாமல் கணவன் தொடர்ந்து பேசினான்.
"வீட்டை நான் எடுத்துக் கொள்ளப்போகிறேன்"
வண்டி 100 கிலோமீட்டர் வேகத்தைத் தொட்டது.
"நீ ஆசையாக ஓட்டிக் கொண்டிருக்கும் இந்த பென்ஸ் காரையும் நான் எடுத்துக் கோள்ளப்போகிறேன்'
வண்டி 110 கிலோமீட்டர் வேகத்தைத் தொட்டது.
அவன் மேலும் சொன்னான்,"வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதையும் நான் எடுத்துக் கொள்ளப்போகிறேன். நான் வாங்கிக் கொடுத்த கிரிடிட் கார்டு, சொகுசுப் படகு - இவைகளையும் நீ தந்து விட வேண்டும்"
கார் வேகம் பிடித்து எதிரே தெரிந்த ஒரு காங்க்ரீட் பாலத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.
நர்வசாகி விட்ட கணவன் மெதுவாகக் கேட்டான்," உனக்கு வேண்டியது ஏதாவது இருக்கிறதா? கேள்!"
இதுவரை பேசாமல் வண்டி ஓட்டிக் கோண்டிருந்த மனைவி, உறுதியான, கட்டுப்படுத்தப்பட்ட குரலில் சொன்னாள்."இல்லை, எனக்குத் தேவையானது எல்லாம் என்னிடம் இருக்கிறது!"
கணவன் குறுகுறுப்புடன் கேட்டான்: "ஓ, உண்மையாகவா? என்ன வைத்திருக்கிறாய் அப்படி?"
130 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டியை வலது பக்கம் ஒடித்துக் கொண்டு போய்ப் பாலத்தின் காங்க்ரீட் சுவற்றின் மீது பலமாக மோதினாள் அவள். மோதும் முன்பு, அவள் தன் கணவனைப் பார்த்து, புன்னகையுடன் தன்னிடம் என்ன இருக்கிறது
என்பதை இப்படிச் சொன்னாள்:
(முற்றும்)
-----------------------------------------------------------------------------------
எததனை மோசமான விபத்திலும் ஆளைக் காப்பாற்றக் கூடிய ஏர்பேக் என்னும் கவசம் அணிந்திருப்பதைத்தான் சுருக்கமாக அப்படிச் சொன்னாள்.

No comments:

Post a Comment