Thursday, December 9, 2010

ஸ்பெக்ட்ரம் முறைகேடு :குற்றவாளி யார்?

ஸ்பெக்ட்ரம் ஊழல் இதுவரை நாம் பேசி வந்த பல ஊழல்களை எல்லாம் ஒரேயடியாகப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. அதிலும் மத்தியக் கணக்குத் தணிக்கைத் துறை சம்பந்தமில்லாமல் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அறிக்கையை வெளியிடுமா?

natpu

இந்த இலாகாவைப் பெறுவதற்கு தி.மு.க எவ்வளவு பாடுபட்டது என்பதையும் யாரும் மறந்துவிட முடியாது. ஒரு காலத்தில் மாநில சுயாட்சி கோரிக்கையுடன்  மத்திய அரசின் மீது பாராமுகமாக இருந்த தி.மு.க தற்போது நாட்டின் மிக உயர்ந்த ஊழலோடு தொடர்புபடுத்திப் பேசப்படுவதை எப்படிப் பார்க்க முடியும்? தேய்வதாக முழக்கமிட்ட தெற்கின் சாதனை என்றா?
கார்கில் வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்ததும் மகாராஷ்டிர முதல்வரைப் பதவியை விட்டு விலகச்சொல்ல காங்கிரசால் முடிந்தது. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாவைக் குறிவைத்து முன்பு பேசப்பட்டபோது முதல்வரான கருணாநிதி பதிலுக்கு ராசா தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் குற்றம் சாட்டுகிறார்கள் என்கிற கண்ணீர்ப்புகைக் குண்டைத் தூக்கி வீசினார். அந்தப் புகை மூட்டத்தை எல்லாம் மீறித்தான் தி.மு.கவும் அங்கம் வகிக்கிற மத்திய அரசின் அங்கமான மத்தியக் கணக்குத் தணிக்கைத்துறை இழப்பு குறித்த புள்ளிவிபரங்களைத் தெரிவித்திருக்கிறது. 


natpu


இப்போது இவ்வளவு விஷயங்கள் வெளிவந்தபிறகும் தமிழக முதல்வர் கருணாநிதி அலைக்கற்றை ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் ராசா குற்றவாளி அல்ல என்றதோடு...


மேலும் படிக்க: http://www.natpu.in/Pakudhikal/Arasiyal/rasha.php

நன்றி - நட்பூ இணைய இதழ்..

Sunday, November 7, 2010

உத்தம புத்திரன் - சினிமா விமர்சனம்




natpu


தெலுங்கிலிருந்து வந்திருக்கும் இன்னொரு இறக்குமதிச் சரக்கு. ஏற்கனவே 'சுப்பிரமணியம்' படத்தில் பார்த்த மாதிரி கூட்டுக்குடும்பம். அதில் வரும் ஜெனிலியா தான் இதிலும் . துவக்கக் காட்சியில் வந்துபோகிறார் ஸ்ரேயா. தனுஷ் நண்பனுக்காக திருமண மண்டபத்தில் பெண்ணைக் கடத்தப் போய் மாற்றி வெறொரு பெண்ணான ஜெனிலியாவைக்கடத்திவருகிறார். வழக்கம்போல ஒரு கும்பல் துரத்துகிறது.
இருவரும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். தன்னுடைய வீட்டிற்கே ஜெனிலியாவை அனுப்பி வைக்க - அங்கு அவர் நல்லபெயர் எடுக்கிறார் .தனுஷீக்குத் திருமணம் முடிக்க அந்தப்பெரிய குடும்பத்தில் முடிவெடுக்கும்போது ஜெனிலியாவைக் கடத்துகிறார்கள் அவருடைய உறவினர்கள். குடுமி(!) வைத்த முரட்டுக்குடும்பத்தில் நுழைந்து விவேக்கைப் பயன்படுத்தி தன்னுடைய குடும்பத்தினரை வெளிநாட்டிலிருந்து வருபவர்களாக நடிக்க வைத்து (சகலகலாவல்லவன் காலத்துத்துருப்பிடித்த உத்தி!) அவர்களை ஏமாற்றி தங்களுடைய திருமணத்தை முடித்து பிரிந்துகிடந்த குடும்பத்தை ஒன்று சேர்ப்பதற்குள் - எப்போது படம் முடியும்..


natpu


மேலும் படிக்க:  

நன்றி - நட்பூ (www.natpu.in)

Thursday, November 4, 2010

தீபத் திரு நாள் வாழ்த்துக்கள்

தீபத் திரு நாள் வாழ்த்துக்கள்




பல்வேறு நாட்டிலுள்ள  அணைத்து இந்தியர்களுக்கும், எங்களது இதயம் கனிந்த,
தீபத் திரு நாள் வாழ்த்துக்கள்.

இந்த தீபத் திரு நாளானது, அனைவரது வாழ்விலும், நல்லதொரு மேன்மையை தரக்கூடிய ஒளியை ஏற்றும் விதமாக அமைய வேண்டும்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே...

நன்றி - நட்பூ (www.natpu.in)

Wednesday, November 3, 2010

பிம்பம்



பிம்பம் (சிறுகதை)


natpu


மாசக் கடைசியில் ஒவ்வொரு மாசமும் அப்படித்தான் –  பருப்புத் தட்டுப்பாடில் ஆரம்பித்து சிறுகச் சேர்ந்து கட்டுக்கடங்காமல், திடீரென்று பெருத்துவிட்ட பூதத்தைச் சமாளிக்க P.F. இல் கடன் வாங்குவது பற்றிப் பாரதியுடன் இறங்கிவிட்ட பேச்சு சுவாரஸ்யத்தில், தான் திடீரென்ற நின்ற இடத்திலிருந்து தள்ளப்படுவதுகூடத் தெளியாத அதிர்ச்சியில் தள்ளாடிப் போனான்.
‘ஸாரி மாடம்! மன்னிச்சுடுங்க மாடம்!’ அந்த வாலிபனின் கைகளும் கண்களும் தவித்தன. கன்னங்கள் ...


natpu


மேலும் படிக்க: 



நன்றி - நட்பூ (www.natpu.in)

Saturday, October 30, 2010

கர்ப்பப்பையை அகற்றிவிட்டு....

கர்ப்பப்பையை அகற்றிவிட்டு வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் பெண்கள்


natpu

சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு விமான நிலையச் சோதனையின்போது பிடிபட்டிருக்கிறார்கள் 30 பெண்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் 25 வயதுக்குட்பட்டவர்கள். 
இவர்களுடைய பாஸ்போர்ட்கள் ஒரிஜினல் என்றாலும் அதிலிருந்த சில முத்திரைகளைச் சோதித்தபோது அந்த முத்திரைகள் போலியென்று தெரிய வந்ததும் கைது செய்யப்பட்டு சென்னை சைதாப்பேட்டை சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார்கள். 
தமிழகம், கேரளம், ஆந்திரா மூன்று மாநிலங்களைச் சேர்ந்த பெண்களும் இதில் அடக்கம். 
வீட்டு வேலைகளுக்காக இவர்கள் வளைகுடா நாடான ஓமனுக்குக் கிளம்புவதற்கு முன்பு பிடிபட்டிருக்கிறார்கள். இதையொட்டி இவர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாகச் சில ஏஜெண்டுகளைக் கைது செய்திருக்கிறார்கள் போலீசார். 
இது ஏதோ ஒரு நாளில் மட்டும் தற்செயலாக நடந்த சம்பவம் அல்ல. இதன் பின்னால்தான் எவ்வளவு அதிர்ச்சியூட்டும் பின்னணி?
மீபத்தில் தென்னிந்தியாவிலிருந்து இளம்பெண்கள் அடிக்கடி வளைகுடா நாடுகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அங்கு வீடுகளில் வேலைகளுக்குப் போவதாகச் சொன்னாலும் பெரும்பாலானவர்கள் அங்கு போனதும் பாலியல் தொழிலில் பலவந்தமாக ...


natpu

மேலும் படிக்க: 

நன்றி - நட்பூ (www.natpu.in)


Wednesday, October 27, 2010

எது தமிழ்ப்படம்? ஒச்சாயி - திரைப்படமும் சர்ச்சையும்

எது தமிழ்ப்படம்?


natpu

ருத்தி வீரன், சுப்பிரமணியபுரம் படத்திற்குப் பிறகு மதுரை சுற்றுப் புறத்தை மையமாக வைத்துப் பலவிதமான படங்கள் வர ஆரம்பித்துவிட்டன. செழுமையான கதை உயிர்ப்போடு இல்லாமல் அந்தப் பிராந்தியத்தை மட்டும் திரைப்பட நகல் எடுக்கும்போது அவை எடுபடாமல் போய்விடுகின்றன.
இந்த வரிசையில் இப்போது வந்திருக்கும் படம் - ஒச்சாயி.
ஒச்சாயி. மதுரையில் உசிலம்பட்டி வட்டாரத்துக்கே உரித்தான ஒரு தமிழ்ச்சொல். மதுரைக்கு பக்கத்தில் உள்ள உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள பாப்பாபட்டியில் இருக்கிற ஒச்சாண்டம்மன் கோவில் கருமாத்தூரிலும் இருக்கிறது. முக்குலத்தோருக்குச் சொந்தமான இந்தக் கோவிலில் இருக்கும் ஒச்சாண்டம்மனையும், ஆச்சிக்கிழவியையும் அந்தச் சமூகத்து மக்கள் தங்கள் முன்னோர்களாக வணங்குகிறார்கள். இப்போதும் அங்கு 'ஒச்சாயி' என்கிற பெயர் பல பெண்களுக்கு வைக்கப்பட்டிருப்பதை இந்தப் பகுதிக்குப் போனவர்கள் உணர்ந்துகொள்ள முடியும்.
ரத்த மரபணுக்கள் சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் பல்லாண்டுகளாக மற்ற இனங்களோடு திருமண உறவு செய்துகொள்ளாமல்

மேலும் படிக்க: 

நன்றி - நட்பூ (www.natpu.in)

Tuesday, October 26, 2010

ஒச்சாயி - சினிமா விமர்சனம்



ஒச்சாயி


natpu




ராஜேஷ் முதல் மனைவி ஒரு மகனைப் பெற்றுவிட்டு இறந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்கிறார். மகன்  மொக்கைச்சாமி வளர்ந்த நிலையில் இருக்கும்போது, அந்த மனைவி வேறு ஒருவருடன் தொடர்பாக இருப்பதைப் பார்த்துவிடும் ராஜேஷ் அந்த இடத்தில் அவர்களைக் கொலை செய்துவிட்டுச் சிறைக்குப் போகிறார். அவருடைய மகன் தனித்து விடப்பட்டு தாதா ஒருவரால் வளர்க்கப்படுகிறான். சகல பழக்கங்களும் அவனுடன் வளர்கின்றன.
சிறையில் இருந்து விடுதலை ஆகி ஊருக்கு வரும் ராஜேஷுக்கு தன் மகன் வளர்ந்து நிற்கும் விதத்தைப் பார்த்து அதிர்ச்சி. அவரைத் தொடர்ந்து இம்சிக்கும் மகனை அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. குடி, கொலை, தாக்குதல் என்று அலையும் மகன், பெண்கள் மீதே வெறுப்புடன் இருக்கிறான். பெண்கள் குறித்துக் கேவலமாகப்..




natpu




மேலும் படிக்க: http://cinema.natpu.in/thiraippadam/vimarsanam/oochaye.php

Monday, October 25, 2010

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிக் கட்டணங்களை நிர்ணயிப்பவர் யார்? தடுப்பவர் யார்?


தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிக் கட்டணங்களை ..



natpu

மிழகத்தில் நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தைச் சேர்ந்த பல பெற்றோர்களுக்கு உருவாகியிருக்கும் குழப்பம் - தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண விஷயத்தில் தமிழக அரசு என்னதான் நினைக்கிறது? இந்தக் குழப்பத்தின் உச்சக்கட்டமாக தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக்குழுத் தலைவரான நீதிபதி கோவிந்தராஜன் தன்னுடைய பதவியை விட்டு விலகியிருக்கிறார்.
விலகலுக்கான காரணம் என்ன?
தமிழகத்தில் முன்பு கிறிஸ்தவ நிறுவனங்கள் நடத்திய பள்ளிகள் பரவலாக இருந்தன. நல்ல வசதி படைத்தவர்கள் கல்வியைப் பரப்பும் நோக்கத்தில் எழுப்பிய பள்ளிகளும், கல்லூரிகளும், சில பல்கலைக்கழகங்களும் கூட இருந்தன. இவற்றில் படித்து முன்னேறியவர்களின் எண்ணிக்கை அதிகம். மாநகராட்சிப் பள்ளிகளின் தரமும் குறையாமல்தான் இருந்தன.
ஆனால் எண்பதுகளுக்குப் பிறகு அரசுப் பொதுமருத்துவமனைகள் இயங்குவதைப் போல 

மேலும் படிக்க: http://www.natpu.in/Pakudhikal/Mukappukkatturai/palli.php

நன்றி - நட்பூ (www.natpu.in)

Sunday, October 24, 2010

பீகார் தேர்தலில் போட்டியிடும் 219 கிரிமினல்கள்







பீகாரில் நடைபெற்றுவரும் சட்டமன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்களில் 219 பேர் கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் எனத் தெரியவந்திருக்கிறது. இதில் 129 பேர் மீது கொலை மற்றும் 


மேலும் படிக்க: http://www.natpu.in/Pakudhikal/Seydhikal/article9.php


Saturday, October 23, 2010

தி.மு.க விடம் ஏற்பட்டிருக்கும் பதற்றங்கள் : காரணம் என்ன?

தி.மு.க - வின் பதற்றம் : காரணம் என்ன?



natpu


மீபத்தில் மாவட்டவாரியாகத் தன் கட்சியினரைச் சந்தித்துவரும் தி.மு.க தலைவரான கருணாநிதியின் பேச்சில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை தமிழக அரசியலை இயல்பாகக் கவனித்து வரும் யாரும் உணர்ந்துகொள்ள முடியும். அதில் அவர் தொடர்ந்து வலியுறுத்தும் விஷயம் - உள்கட்சி ஒற்றுமை. அப்படியொரு ஒற்றுமை இருந்தால் ஆயிரம் அ.தி.மு.க.க்கள் வந்தாலும் தி.மு.க வை ஒன்றும் செய்ய முடியாது என்று அவர் சொல்லவேண்டிய அவசியம் என்ன?
தன்னைக் குறைத்து மதிப்பிட்டு சர்வே ஒன்று ஒரு நாளிதழில் வெளிவந்ததற்காக அந்த நிறுவனம் பட்டபாடு தமிழகத்திற்குத் தெரிந்த ஒன்றுதான். உட்கட்சிப் பிரச்சினை எந்தெந்த விதங்களில் எல்லாம் தி.மு.க வில் வெடித்திருக்கிறது என்பதும் பலருக்கும் தெரியும். தி.மு.க வில் இருக்கும் மோதல்கள் குறித்த பத்திரிகைச் செய்திகள்

natpu


மேலும் படிக்க: http://natpu.in/Pakudhikal/Mukappukkatturai/dmk.php

நன்றி - நட்பூ (www.natpu.in)



Thursday, October 14, 2010

முறுக்கு மீசையும் ; வீச்சரிவாளும்...


அய்யனார்...




natpu
முறுக்கு மீசையும் ; வீச்சரிவாளும்....
ட்ட மலை அய்யனாரே மாவூத்து வேலவரே…  மழையை இறக்கிவிடு…  மானுடங்க கையெடுக்க…’’
- அய்யனாரைப் பற்றிய ஒரு நாட்டுப்புறப் பாடல். ரொம்பவும் விழிப்பான கண்கள்;  ஏறின புருவங்கள்;  மேடான கன்னத் தசையில் துருத்திக் கொண்டிருக்கும் அடர்த்தியான மீசை; தடித்த உதடுகளுடன் துடிப்பான சாமியாக வெட்ட வெளியில் நிற்கிறார் அய்யனார்.
வலது கையில் நீளமான செண்டு;  இடது கையில் ஒரு மந்திரக்கோல். பக்கத்திலேயே காவல் தெய்வங்களான முத்துக் கருப்பு; வேட்டைக் கருப்பு.
சற்றுத் தள்ளி பல அழுத்தமான வர்ணங்கள் மினுங்குகிற குதிரைகள்; யானை. இப்படித்தான் காட்சியளிக்கிறது கோவில். இருப்பது சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரை அடுத்துள்ள எஸ். கோவில்பட்டி கிராமத்தில். பொதுவாக தென் தமிழகத்தில் பல இடங்களில் அய்யனார் கோவில் இருந்தாலும் இங்கே மட்டும் தனிவிசேஷம்.


natpu


கொஞ்சம் வானம் பார்த்த பூமியாகக் கிடக்கிற கோவில்பட்டியில் சில தலைமுறைகளுக்கு முன்பு ஒரு சம்பவம்...
வறண்ட காலத்தில் கடப்பாரை கொண்டு வள்ளிக்கிழங்கு தோண்டப் போவது பலருக்கு வழக்கம். அப்படி ஒரு சமயம் தோண்டியபோது மண்ணைப் புரட்டியதும் ‘ணங்’ என்று கனமான சத்தம்.


மேலும் படிக்க: 
http://www.natpu.in/Pakudhikal/Aanmeekam/ayyanar.php

Monday, October 11, 2010

ஆண்மை தவறேல்...!!!





ஆண்மை தவறேல்...!!!







இந்த வரியை நாம் எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நடைமுறையில் இந்தக் கேரக்டரைப் பார்த்திருக்கிறோமா? சந்தேகம்தான்.




வாங்க பாப்போம்.... : 
http://cinema.natpu.in/thiraippadam/cinebits/ramachandran.php


நன்றி..!

Sunday, October 10, 2010

நறுக் செய்தி...!



விஜயகாந்த் பெயரில் மோசடி செய்த மூன்று பெண்கள் கைது  - செய்தி







  
''கேப்டனுக்குத் தமிழில் பிடிக்காத வார்த்தையைப் பத்தி நல்லாத் தெரிஞ்சிருந்தும் தாய்க்குலம் இப்படிச் செஞ்சிருக்கீங்களே? அவர் லேசில் மன்னிப்பாரா? சொல்லுங்க.''




மேலும் படிக்க: www.natpu.in

Saturday, October 9, 2010

அயலகத் தமிழர்களா...? - அப்ப வாங்க சந்திப்போம்....!

அயலகத் தமிழர்கள் சங்கமிக்கும் நட்பூ - வின் தளம். 

வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு, ஓர் நற்செய்தி... ஆம்...





வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கென நம் நட்பூ (natpu.in) தளத்தில், புதிதாக
" அயலகத் தமிழர்கள் " என்று புதிய பகுதி தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த பகுதியில், நீங்கள் வசிக்கும் நாட்டில் நடக்கும், தமிழ் மற்றும் தமிழர்கள் பற்றிய செய்திகளையும், கலை, இலக்கியம், நூல் வெளியீட்டு விழா, மற்றும் இசை வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை நீங்கள் சேகரித்து அனுப்பினால் அது நட்பூ தளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

பக்கத்தை பார்க்க: 
http://www.natpu.in/natpu/Pakudhikal/AyyalagaThamizhargal/

நன்றி...!

www.natpu.in

Tuesday, September 28, 2010

பாமரனுக்கும் புரியணும் - அதுக்கு பேர்தான் தீர்ப்பு - Justice AR. Lakshmanan

மற்றவர்களுக்குப் புரியாதபடி வழங்குவது தீர்ப்பல்ல - 

நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன்



natpu

சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஏ.ஆர். இலட்சுமணன் தனது வாழ்க்கை வரலாறை ‘காலமெல்லாம் வசந்தம்’ என்னும் நூலாக எழுதியுள்ளார். இந்த நூலின் வெளியீட்டு விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 25.09.10 அன்று நடந்தது. 

மத்திய மந்திரி ஜி.கே. வாசன் தலைமை தாங்கி நூலை வெளியிட்டார். மூத்த வக்கீல் காந்தி, கிருஷ்ணா சுவீட்ஸ் முரளி,  பெங்களூர் டெஸ்சால்ஸ் ரவி, முத்து குழுமத் தலைவர் ஞானம், சிங்கப்பூர் சேன் ஏசியா அசோசியேட்ஸ் நிர்வாக இயக்குநர் நாச்சியப்பன் ஆகியோர் நூலைப் பெற்றுக்கொண்டனர். 

natpu


முன்னதாக வரவேற்புறையை சீனியர் வக்கீல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் வழங்கினார். தலைமை தாங்கி நூலை வெளியிட்ட ஜி.கே. வாசன் பேசும்போது, “ஏ.ஆர். லட்சுமணன், ஐகோர்ட்டுகளில் தலைமை நீதிபதியாகவும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும் திறம்பட பதவி வகித்து, பல சிறப்பான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அதேபோன்று மத்திய சட்டக்குழுத் தலைவராக இருந்து பல்வேறு பரிந்துரைகளையும் அரசுக்கு வழங்கியுள்ளார். தற்போது முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்னையில் தமிழகத்தின் பிரதிநிதியாகவும் செயல்பட்டு வருகிறார். அவரது வாழ்க்கை வரலாறு நூல், வளரும் இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாக இருக்கும். இலக்கியத்திலும் அவருக்குப் புலமை உண்டு. சமூக அக்கறையோடு அவரது தீர்ப்புகள் இருக்கும்” என்றார். 

கவிஞர் வைரமுத்து, தேவகி முத்தையா, ஜெம் கிரானைட் நிர்வாக இயக்குநர் வீரமணி, சாந்தகுமாரி சிவகடாட்சம் ஆகியோர் தமது பாராட்டுரைகளை வழங்கினர். 

கவிஞர் வைரமுத்து பேசும்போது, 

மேலும் படிக்க:

நன்றி..!

நட்பூ - www.natpu.in 

 

Monday, September 27, 2010

குப்பையாகும் இந்தியா - நேரடி ரிப்போர்ட்

" குப்பைத் தொட்டியாகும் இந்தியா : நெருக்கும் மின்னணுக் கழிவு
அபாயம்
 "


natpu
            இன்றைய இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அளவிடும் அடிப்படை அலகுகளில் ஒன்றாக கணினித்துறை உள்ளது. எதிர்கால இந்தியா, கணிணித்துறை உலகுக்குச் சவால்விடும் ஒன்றாகத் திகழும் என கணிக்கப்படுகிறது. அதற்கேற்ப பொறியியல் மற்றும் மருத்துவத் துறைகளின்மீது மாணவர்களுக்கு இருந்த ஆர்வம் இன்று கணினி சார்ந்த படிப்புத் துறைகளின்மீது திசை திரும்பியுள்ளது. இந்தியா, கணினித்துறையில் ஜாம்பவானாவதில் ஆட்சேபம் ஏதுமில்லை. ஆனால் அதற்கு முன்பே இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் மேற்கத்திய நாடுகளின் கணினி மற்றும் மின்னணுக் கழிவுகளின் குப்பைத் தொட்டியாக மாறத்துவங்கியுள்ளது.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் மின்னணு சாதனங்களின் வளர்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இன்றைய மாறிவரும் மதிப்பீடுகள், நுகர்வுக் கலாசாரம் ஆகியன மின்னணு சாதனங்களை உபயோகிக்காதவர் இல்லையென்ற நிலைக்கே கொண்டு சென்றுள்ளன. உபயோகித்து தூக்கியெறியும் மின்னணு சாதனங்கள், முதலாளித்துவ மற்றும் பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளன.
சாதனங்களைப் போலவே முதலாளித்துவ வர்க்கம் மக்களிடம் ஆசைகளையும் உற்பத்தி செய்கின்றது. ஆடம்பரங்களைக்கூட தேவையாக மாற்றிக்காட்ட வல்லது இன்றைய விளம்பர யுக்தி. மற்றொரு வகையில் இன்றைய கூட்டு நனவிலி மனத்தில், அதிகம் நுகர்பவன் அதிகம் வாழ்கிறான் என்றொரு கருத்து உருக்கொண்டுள்ளதெனவே கொள்ளலாம். இன்றைய மாநகர் சார்ந்த மேல்தட்டு, நடுத்தர மாணவ வர்க்கம் பாடப் புத்தகங்களுடன் தங்களுக்கென ஒரு கணினியும் படிப்புக்கு அவசியம் என்று கருதும் சூழல் உள்ளது. செல்போன் மோகம் பற்றி சொல்லவே தேவையில்லை.
நுகர்வோரைக் கணக்கில் கொண்டு உருவாகி வரும் நூற்றுக்கணக்கான மின்னணு சாதனங்கள், கணினிகளை உபயோகிப்பவர்கள், அவை பழுதுபடும்போது பழுதுநீக்குவதை விட்டு பெரும்பாலும் தூக்கியெறிந்துவிடும் சூழலே உள்ளது. இந்த யூஸ் அண்ட் த்ரோ மனோபாவம் நிறுவனங்களுக்குப் பெரும் லாபம் சம்பாதித்துக் கொடுக்கின்றன. இந்தப் பயன்படுத்தித் தூக்கியெறியும் மனோபாவம் உறவுகளிலும் வளர வெகுநாளாகாது என்பது தனியே ஆராய வேண்டிய விஷயம். ஆனால் இப்படித் தூக்கி எறியப்படும் மின்னணுக் கழிவுகள் எங்கே போகின்றன?

மேலும் தொடர: http://natpu.in/Pakudhikal/Nam%20Samookam/kuppaithotti.php

நன்றி..!
நட்பூ - இணைய இதழ்.
www.natpu.in - தமிழர்களுக்கான இணைய முகம்.

Saturday, September 25, 2010

என்னது 5400 கோடி டாலரா?

அமெரிக்காவின் பணக்காரர்கள் பட்டியல் வெளியிடு..



natpu


போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியீட்டுள்ள செய்தியில்,

உலக கோடீஸ்வரர் பட்டியலில் தொடர்ந்து 17  ஆண்டுகளாக ....

மேலும் படிக்க: 


Friday, September 24, 2010

பொது மக்களே சாகசக்கரர்கள்....!!!!

ஆட்டோக்களில் பொதுமக்கள் நிகழ்த்தும் சாகசப் பயணங்கள்



natpu
சென்னை மாநகரம் என்றாலே முதன்மையான அடையாளங்களாக மெரினா, கூவம் போன்ற இடங்கள்தான் முன்னிற்கும். அதற்கு அடுத்ததாக பரபரப்பான மனிதர்களையும், வாகன நெரிசல்களையும் கூறலாம். இத்தகைய வாகன நெரிசல்களின் முதன்மை காரணிகளாக இருப்பவை சென்னையில் எங்கும் காணப்படுகின்ற ஆட்டோக்களே. எங்கும் ஆட்டோ... எதற்கும் ஆட்டோ... காலை நேரங்களில் அவசர அவசரமாக அலுவலகங்களுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு ஆபத்பாந்தவன் இந்த ஆட்டோக்கள். சிறிது நேர இடைவெளியில் பேருந்தை தவறவிட்டவர்களுக்கும் இந்த ஆட்டோக்கள்தான் கைகொடுக்கின்றன.
natpuஇவ்வாறு சென்னை மக்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்துவிட்ட ஆட்டோக்களில் சில வில்லங்கங்களும் இருப்பதை மறுத்தற்கியலாது. மாநிலத்தில் பல இடங்களில் நடைபெறும் சிறிய விபத்திலிருந்து மிகப்பெரிய விபத்துக்கள் வரை அனைத்திற்கும் அநேகமாக இந்த ஆட்டோக்கள் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. ஆட்டோ ஓட்டுநர்களின் அனுபவமின்மையே இதற்கு காரணம். சில ஆயிரங்களைக் கொடுத்து லைசென்சை மிக எளிதாக பெறுவதில் தொடங்கி லைசென்சே இல்லாமல் ஓட்டுவது வரை ஆட்டோக்களைக் கையாள்பவர்கள் சிலபல செப்படி வித்தைகளைக் கையாள்கிறார்கள்.
natpuதினப்படிக்காக ஆட்டோ ஓட்டுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகம். பணம் அதிகம் உள்ள ஒருவர் அதிகப்படியான ஆட்டோக்களை வாங்கி தினப்படிக்காக ஆட்டோ ஓட்டுநர்களிடம் கொடுப்பது என்பது நடைமுறையில் உள்ளது. இவர்களிடமிருந்து ஒரு நாளைக்கு இவ்வளவு தொகை தருவதாகச் சொல்லி, ஆட்டோக்களை வாங்கி ஓட்டுபவர்களில் சிலருக்கு முறையான லைசென்ஸ் இருக்காது. தினப்படிக்காக விடுபவருக்கு அவருக்கான பணம் முறையாக வந்துவிட்டால் போதும். இதையெல்லாம் கண்காணிக்க வேண்டும் என்பது அவருக்கு அவசியமில்லை. மீறி எங்காவது ஆட்டோ பிடிபட்டால் அங்கு பணம் விளையாட ஆரம்பித்துவிடும். அல்லது அரசியல்வாதிகளின் கைகள் தன்னுடைய வேலையை காட்டும். அரசியல்வாதிகளுக்கு இதனால் கிடைக்கக்கூடிய லாபம் அவர்களுடைய கட்சி பேரணிகளுக்கு ஆட்டோக்கள் இலவசமாக கிடைக்கும் என்பதே.
தற்பொழுது Free permit என்ற பெயரில் விதவைகளுக்கும் ஏழைப் பெண்களுக்கும் ஆட்டோவிற்கான உரிமம் வழங்கப்படுகிறது. இதை வைத்து ஆட்டோக்களை வாங்கும் அவர்கள் அதை தினப்படிக்காக விடுகிறார்கள். இதிலும் பல முறைகேடுகள் நடந்தவண்ணம் உள்ளது.
natpuprivate auto என்ற வகையில் நகரில் ஓட்டப்படும் ஆட்டோக்களில் அதிகப்படியான தில்லுமுல்லுகள் நடைபெறுகின்றன. 










மேலும் படிக்க: 

தவறாமல் உங்க கருத்தை கொஞ்சம் சொன்னிங்கன்னா நாங்க எங்களோட குறைகளை திருதிப்போம், நிறைகளை Develop பண்ணிப்போம்...


Thursday, September 23, 2010

' மடையர்கள், இந்த மனிதர்கள்தான்…..’




வாத்து மடையன் - சிறுகதை 



“அக்கா வாத்து………. தங்கை வாத்து………….’ என்ற இரண்டு வாத்துகள் ஒரு குட்டைக்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்தன.
குட்டிகுட்டியான சில மீன்களும், கொசு முட்டைகளும்தான் அவற்றுக்கு உணவாகக் கிடைத்தன. பிளாஸ்டிக் கவர்களில் படர்ந்திருக்கும் அழுக்குகள் என்றால், தங்கை வாத்துக்கு கொண்டாட்டம்தான்! ஆனால், இது அக்கா வாத்துக்கு சுத்தமாக பிடிக்காது.

”நீ செய்வது தவறு. மடமனிதனைப் போலவே இருக்கிறாயே………?! சாப்பிடும்போது பிளாஸ்டிக் கவரின் சிறு பகுதி உன் வயிற்றுக்குள் போனால்கூட மரணம் நிச்சயம்’’ என்று எச்சரித்தது அக்கா வாத்து.
”மடமனிதன் என்று என்னைச் சொல்கிறாயே……?! மனிதர்கள்தானே “வாத்து மடையன்’ என நம்மை வைத்து அவர்களாகவே சொல்லிக் கொள்வார்கள்?’” என்று சற்று கோபமாகக் கேட்டது தங்கை வாத்து.
natpu
”மடையர்கள், இந்த மனிதர்கள்தான்…..’ என நீ சொல்லும்போது எனக்கு ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது. இந்தக் கதையை நான் சிறு வயதாக இருக்கும்போது நம் பாட்டி வாத்து எனக்குச் சொன்னது’’ என்றது அக்கா வாத்து.
”அப்படியா………?! நம் பாட்டி சொன்ன கதையா…?! சீக்கிரமாகச் சொல்லு’’ என்று ஆர்வமானது தங்கை வாத்து.
”ஒரு ஊரில் ஒரு மனிதன் இருந்தான். வீட்டில் பல வாத்துகளை வளர்த்து வந்தான். அதில் பொன் நிறத்தில் ஒரு வாத்து இருந்தது. இந்த வாத்து நீரில் நீந்தும்போது சூரியக்கதிர்கள் அதன் இறகுகளில் பட்டுத் தெறித்து பளபளக்கும்.
அவனிடம் பல தவறான பழக்கங்கள் இருந்தன. அதில் ஒன்று கஞ்சத்தனம்! நம் வாத்துக் கூட்டத்துக்கு சரியாக உணவே கொடுக்க மாட்டான். எப்போதும் தன்னைப் பற்றி மட்டுமே யோசிக்கும் சுயநலக்காரன். இந்த மனிதனைத் திருத்துவதற்காக மற்ற தோழர்களோடு சேர்ந்து பொன் நிற வாத்து ஒரு திட்டம் தீட்டியது. திட்டப்படி, பொன் நிற வாத்து முட்டைகளைப் பளபளப்பாக பொன் நிறத்தில் இட்டது.
natpuஅந்த முட்டைகளை விற்று நிறைய லாபம் பார்த்தான். அந்த லாபத்தில் நன்றாகத் தின்று அவன் கொழுத்தே போய்விட்டான். அப்போதும் வாத்துகளுக்கு நன்றாக உணவு கொடுக்க வேண்டும் என்று அவன் நினைக்கவே இல்லை. இந்த நிலையில், ஒரு நாள் பேராசைப்பட்டு பொன் நிற வாத்தின் வயிற்றில் நிறைய முட்டைகள் இருக்கும் என எண்ணி அந்த வாத்தின் வயிற்றைக் கிழித்தான். அவனது பேராசையால் அந்த வாத்து இறந்ததுதான் மிச்சம்! இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் அவன் திருந்தினான். பேராசைப்படுவதால் யாருக்கும் லாபமில்லை என்பதை உணர்ந்தான். பின்னர் ஏனைய வாத்துகளை நன்றாகப் பராமரித்தான்’’ என்று கதையைச் சொல்லி முடித்தது அக்கா வாத்து.
”அக்கா, இப்போது நினைத்தாலும் வருத்தமாக உள்ளது. அந்தப் பொன் நிற வாத்து எவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்திருக்கிறது’’ என்று உணர்ச்சிவசப்பட்டது தங்கை வாத்து.
”இது போன்ற அறிவில்லாத செயல்களில் ஈடுபடுபவர்களைத்தான் வாத்து மடையன் என மனிதர்கள் அழைக்கிறார்கள்’’ என்றது அக்கா வாத்து.
natpu
”சரி. வாத்தை கொன்ற அந்த மனிதனுக்கு ஏதாவது தண்டனை கிடைத்ததா……?! என்றது தங்கை வாத்து.
”அந்த மனிதனுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதர்களுக்கும் சேர்த்து நாம் ஒரு தண்டனையை வழங்கி இருக்கிறோமே……… அதாவது, நாம் முட்டையை அடைகாத்து குஞ்சுகள் பொறிப்பதையே விட்டுவிட்டோம். நம் முட்டைகளை கோழிகளின் முட்டைகளோடு வைத்து அவற்றை ஏமாற்றித்தான் மனிதர்கள் வாத்துக் குஞ்சுகளைப் பெறுகிறார்கள். இதில் கோழிகளுக்கு இருக்கும் பெருந்தன்மையையும் மனிதர்கள் அறியமாட்டார்கள்’’ என்று சொல்லிப் பெருமூச்சுவிட்டது அக்கா வாத்து.



மேலும் படிக்க: www.natpu.in

நன்றி நட்பூ - இணைய இதழ்

Wednesday, September 22, 2010

' தமிழகம் முழுவதும் எனது வீடு : எனது குடும்பம்தான் '' - முதல்வர் கருணாநிதி

நறுக் செய்தி...!?







தமிழகம் முழுவதும் எனது வீடு : எனது குடும்பம்தான் '' - முதல்வர் கருணாநிதி


?
?

?
?
?


''நீங்களே உணர்ந்து சொல்லும்போது யாரும் மறுக்க முடியும்ங்களா?' வாழ்க குடும்ப உணர்வு''.




நன்றி..!

இந்து (சிவன்) கோவில்களில் இதெல்லாம் கூடாதாம்...!!!!



சிவாலயங்களில் இதையெல்லாம் செய்யகூடாதுங்க.... (பெரியவங்க சொல்றாங்க)



natpu

அக்காலத்தில் (அதாவது திரை போட்டிருக்கும் நேரம், கதவு சாத்தப்பட்ட பிறகு) தரிசனம் செய்தல், நெற்றிக்கு விபூதி இடாமல் செல்லல், செருப்புக் காலுடன் செல்லுதல், கோபுரம், விமானம், தெய்வமூர்த்திகள் ஆகியவற்றின் நிழலைத் தாண்டுதல், வாஹனத்தில் செல்லுதல், ஆண்கள் உடலின் மேல் பாகத்தை மூடிச்செல்லுதல், தலைமுடியை பின்னால் அவிழ்த்துத் தொங்கவிடுதல், தலைமுடியைக் காயவைத்தல், மூக்குச் சிந்துதல், தும்முதல், கோட்டுவாய் விடுதல், வாயில் எதையாவது மென்னுதல், பேசுதல், வேகமாகச் சுற்றுதல், தீபம் அணையும் படி மூச்சுவிடுதல், வாயால் ஊதி அணைத்தல்,


வாங்க பார்ப்போம்: 



Monday, September 20, 2010

அம்மாவின் துணிச்சல்...

மதுரை கூட்டத்தில் திட்டமிட்டபடி கலந்து கொள்வேன் : ஜெயலலிதா


அ.தி.மு.க பொதுச்செயலாளரான ஜெயலலிதா அவர்கள்  தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்  '' எனக்கு வந்த மிரட்டல் கடிதங்கள் குறித்து எந்தக் கவலையும் இல்லை.  1991லிருந்து...
மேலும் படிக்க: 

Thursday, September 16, 2010

மகனின் பொய்யும் : நவீன உலகத்து தாயும் - நட்பூ

சிறுகதை:

natpu


தன் மகன் மணிகண்டன் ஒரு ஒரு இளம் பெண்ணுடன் சேர்ந்து தங்கியிருப்பதில் அவனுடைய தாயாருக்கு விருப்பம் இல்லை.
இரண்டு பிள்ளைகளில் அவன் மூத்தவன். காலதேவன் கருணையின்றி அந்தத் தாய்க்கு விதைவைக் கோலத்தைக் கொடுத்திருந்தான். மகனைக் கண்டித்துச் சொல்லவும் முடியவில்லை.
பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மகன் தன் நிறுவனத்தின் அருகே அடுக்குக் குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு குடியிருந்தான். அதோடு அதன் மாத வாடகையான ரூ.15,000 த்தை பங்கிட்டுக் கொள்ளும் முகமாகத் தன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஒருத்தியையும் தங்குவதற்கு அனுமதித்திருந்தான்.
பிரச்சினை, அவள் மிகவும் அழகானவள். அதோடு நவீன உலகத்து மங்கை!
தாய்க்குக் கவலையாக இருந்தது. சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று பெங்களூருக்கு வந்த தாய், 2 நாட்கள் தங்கினார்.
வீட்டில் இருந்த இரண்டு அறைகளில் ஆளுக்கொரு அறையில் அந்தப் பெண்ணும் மணிகண்டனும் தனிதனியாகத் தங்கியிருந்தார்கள். நடுவில் இருந்த வரவேற்பு அறையையும், சமையல் அறையையும் மட்டும் பொதுப் புழக்கத்தில் வைத்திருந்தார்கள். தாய் வந்திருந்த
சமயத்தில் பவ்வியமாக நடந்து கொண்டார்கள்.
ஆங்கிலத்தில் பேசிக்கொண்டார்கள். அந்தப் பெண்ணின் உடைகளும், பேச்சும், தாயின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. ஆனாலும் உண்மையான நிலவரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை!. மகனிடம் கேட்பதற்குத் தயக்கம்.
தன் தாயின் சந்தேகத்தை உணர்ந்த மகன், தாயிடம்,"அம்மா, என்னை நம்பு. கவிதா என்னுடைய ரூம்மேட் மட்டும்தான். வேறு எந்தவிதமான உறவும் எங்களுக்குள் இல்லை!" என்று சொன்னதோடு, இரண்டு நாட்கள் கழித்துத் திரும்பிய தாயாரை வழியனுப்பியும்
வைத்தான்.
ஒருவாரம் சென்றது.
ஒரு நாள் காலை, கவிதா, மணிகண்டனிடம், ஒரு குற்றச் சாட்டை வைத்தாள். தன் அறையில் இருந்த வெள்ளித் தட்டைக் காணவில்லை என்றாள். அதோடு அந்தத் தட்டு, அவன் தாயார் வந்து செல்லும் முன்புவரை இருந்தது என்றாள்.
மணிகண்டன் பதறி விட்டான். இருந்தாலும் அது பற்றித் தன் தாயாரிடம் விசாரிப்போம் என்று தன் தாய்க்குக் கடிதமும் எழுதினான்.

தாய்க்கு அவன் ஒரு கடிதம் கீழே உள்ளது!
-------------------------------------------------------------------------------------------
அன்புள்ளம் கொண்ட அம்மாவிற்கு,
வெள்ளித்தட்டு ஒன்றைக் காணவில்லை. அதை நீங்கள் எடுத்துக்கொண்டு போனீர்கள் என்று நான் சொல்லவில்லை.
அதேபோல அதை நீங்கள் எடுத்துக்கொண்டு போகவில்லை என்று சொல்லவும் தயக்கமாக உள்ளது,
உண்மை என்று ஒன்று இருக்கிறது தாயே!
நீங்கள் இங்கே வந்து சென்றதில் இருந்துதான் அதைக் காணவில்லை!
இப்படிக்கு
அன்பு மகன்
மணிகண்டன்
-------------------------------------------------------------------------------------------
சில நாட்களுக்குப் பிறகு, மணிகண்டனின் தாயாரிடம் இருந்து பதில் கடிதம் வந்தது!
-------------------------------------------------------------------------------------------
அன்பு மகனுக்கு,
கவிதாவுடன் நீ நெருங்கிப் பழகுகிறாய் என்று நான் சொல்லவில்லை
அதேபோல நெருங்கிப் பழகவில்லை என்றும் சொல்லவும் தயக்கமாக உள்ளது,
உண்மை என்று ஒன்று இருக்கிறது மகனே!
கவிதா தன்னுடைய அறையில் தன் சொந்தக் கட்டிலில் படுத்துத் தூங்குபவளாக இருந்திருந்தால், தலையணைக்கு அடியில் இருக்கும் வெள்ளித்தட்டு அவள் கண்ணில் நிச்சயம் பட்டிருக்கும்!
அன்புடன்,
உனது தாய்!
-----------------------------------------------------------------------------------------
நீதி: தாயிடம் பொய் சொல்லாதீர்கள்
அதிலும் அவள் இந்தியத் தாயாக இருந்தால் நிச்சயம் பொய் சொல்லாதீர்கள்
படித்ததில் பிடித்தது

மேலும் படிக்க : www.natpu.in 

எதுக்கு இந்த (முட்டை) அறிவிப்பு....? - நட்பூ - www.natpu.in






வாரத்தில் ஐந்து நாட்களும் சத்துணவுடன் முட்டை வழங்கப்படும் - செய்தி



''தொடர்ந்து வர்ற அறிவிப்புகளைப்  பார்த்தா
தேர்தல் நெருங்கிடுச்சு போலிருக்கே!''


மேலும் பார்க்க கீழே உள்ள தளத்தை  பார்க்கவும்:


www.natpu.in 

Monday, September 13, 2010

ஏர் பேக்கின் அவசியம்....!!!! - சிறுகதை


நெடுஞ்சாலையில் கார் ஒன்று விரைந்து கொண்டிருந்தது. தம்பதியர் பயணித்துக் கொண்டிருந்தார்கள். மனைவிதான் காரை ஓட்டிக் கொண்டிருந்தாள்.
அறுபது கிலோ மீட்டர் வேகத்தில் கார் சென்று கொண்டிருந்தது.
திடீரென்று திரும்பி அமர்ந்த கணவன், அவளைப் பார்த்துப் பேசத் துவங்கினான்.
"திருமணமாகி இருபது ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம். இருந்தாலும் எனக்கு விவாகரத்து வேண்டும்."
மனைவி பதில் ஒன்றும் சொல்லவில்லை! சாலையைப் பார்த்து வண்டியைக் கவனமாக ஓட்டிக் கொண்டிருந்தாள்.
காரின் வேகத்தை அதிகப் படுத்தினாள். இப்போது மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டி செல்ல ஆரம்பித்தது.
கணவன் மேலும் சொல்ல ஆரம்பித்தான்," இது சம்பந்தமாக உன்னுடைய வாதங்கள் எதையும் நான் கேட்க விரும்பவில்லை! ஏனென்றால் உன்னுடைய மிகச் சிறந்த தோழியுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. அவள் உன்னைவிட புத்திசாலி,
அதோடு நேசம் மிக்கவள். காதலில் ஈடுபடத் தெரிந்தவள்.குறிப்பாகச் சொன்னால் உன்னைவிட எல்லா வகையிலும் அவள் சிறந்தவள்"
இதற்கும் பதில் ஒன்றும் சொல்லாமல் அவள் இருந்தாள். ஆனால் காரின் ஸ்டீரிங் வீலைக் கெட்டியகப் பிடித்துக் கொண்டு வண்டியின் வேகத்தை அதிகப் படுத்தினாள் இப்போது மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டி செல்ல ஆரம்பித்தது.
அவளுடைய மனநிலையைப் பற்றிக் கவலைப் படாமல் கணவன் தொடர்ந்து பேசினான்.
"வீட்டை நான் எடுத்துக் கொள்ளப்போகிறேன்"
வண்டி 100 கிலோமீட்டர் வேகத்தைத் தொட்டது.
"நீ ஆசையாக ஓட்டிக் கொண்டிருக்கும் இந்த பென்ஸ் காரையும் நான் எடுத்துக் கோள்ளப்போகிறேன்'
வண்டி 110 கிலோமீட்டர் வேகத்தைத் தொட்டது.
அவன் மேலும் சொன்னான்,"வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதையும் நான் எடுத்துக் கொள்ளப்போகிறேன். நான் வாங்கிக் கொடுத்த கிரிடிட் கார்டு, சொகுசுப் படகு - இவைகளையும் நீ தந்து விட வேண்டும்"
கார் வேகம் பிடித்து எதிரே தெரிந்த ஒரு காங்க்ரீட் பாலத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.
நர்வசாகி விட்ட கணவன் மெதுவாகக் கேட்டான்," உனக்கு வேண்டியது ஏதாவது இருக்கிறதா? கேள்!"
இதுவரை பேசாமல் வண்டி ஓட்டிக் கோண்டிருந்த மனைவி, உறுதியான, கட்டுப்படுத்தப்பட்ட குரலில் சொன்னாள்."இல்லை, எனக்குத் தேவையானது எல்லாம் என்னிடம் இருக்கிறது!"
கணவன் குறுகுறுப்புடன் கேட்டான்: "ஓ, உண்மையாகவா? என்ன வைத்திருக்கிறாய் அப்படி?"
130 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டியை வலது பக்கம் ஒடித்துக் கொண்டு போய்ப் பாலத்தின் காங்க்ரீட் சுவற்றின் மீது பலமாக மோதினாள் அவள். மோதும் முன்பு, அவள் தன் கணவனைப் பார்த்து, புன்னகையுடன் தன்னிடம் என்ன இருக்கிறது
என்பதை இப்படிச் சொன்னாள்:
(முற்றும்)
-----------------------------------------------------------------------------------
எததனை மோசமான விபத்திலும் ஆளைக் காப்பாற்றக் கூடிய ஏர்பேக் என்னும் கவசம் அணிந்திருப்பதைத்தான் சுருக்கமாக அப்படிச் சொன்னாள்.

Friday, September 10, 2010

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள் -நட்பூ

இஸ்லாமிய மக்கள் இன்று தமது நோன்பு பெருநாளைக் குதூகலமாகக் கொண்டாடுகின்றனர்.
நம் நாட்டில் மட்டுமன்றி, உலகில் எங்கெல்லாம் இஸ்லாமியர்கள் வழ்கின்றனரோ அங்கெல்லாம் 
இப்பெருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

பொதுவாக இஸ்லாமியர்களின் மாதங்கள் யாவும் சந்திரனை மையமாகக் கொண்டே கணிக்கப்படுகிறது. நடைமுறை உலகில் நாம் சூரிய ஆண்டை பின்பற்றுவது போல முஸ்லிம்கள் சமய விடயங்களில் சந்திர ஆண்டையே பின்பற்றுகின்றனர். இதன் காரணமாகவேதான் பிறை பார்த்து நோன்பு நோற்று பிறை பார்த்து நோன்பை நிறைவு செய்கின்றனர். 

அதாவது றமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று சவ்வால் மாதம் முதலாவது பிறை கண்டதும் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. இந்த அடிப்படையில் இஸ்லாமியர்களைப் பொருத்தவரை பிறை பார்ப்பது முக்கியமாகிறது. 

natpu
இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயக் கடமைகள் ஐந்து உண்டு. இதில் ஒன்றைத் தவிர்த்துக் கொண்டாலும், அவர் முஸ்லிமாக முடியாது. விசுவாசப் பிரகடணம் (கலிமா), தொழுகை(ஐந்து நேரம் வணங்குவது), ஏழை வரி(ஸாகத்) , நோன்பு(றமழான் மாதம் முழுவதும்), புனித கவுபாவில் குறிப்பிட்ட கால எல்லையில் வணங்குதல் (ஹஜ்) என்பனவே இவை. அதே நேரம் பெருநாள் தினத்திற்கு முன் ஒரு மாதகாலம் நோன்பு நோற்பது என்பதும் சாதாரண காரியமல்ல. ஏனெனில் அதிகாலை சுமார் 4.45 மணிமுதல் மாலை சுமார் 6.15 மணிவரை ஏறத்தாழ 14 மணித்தியாலங்கள் எந்த உணவோ பானமோ உட்கொள்ளாமல் தான் நோன்பு நோற்கப்படுகிறது. உணவுத்தொகுதியில் ஒரு துளி உணவோ, ஒரு துளி நீரோ சென்றடைவதில்லை. அதுமட்டுமல்ல, அழகிய அல்லது ரசனை கொண்ட எதனையும் நோக்குவதில் இருந்து தவிர்ந்து கொள்வதும் வேண்டற்பாலது. உதாரணமாக ஒரு நடனத்தை அல்லது இச்சை தரும் எக்காட்சியையும் பர்க்காது இருப்பதும் முக்கியம். ஐம்புலன்களும் அடக்கப்படுவதே உண்மையான நோன்பு என வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள தளத்தை பார்க்கவும்.
www.natpu.in நட்பூ